gottaa scaled
இலங்கைசெய்திகள்

நினைவேந்தலில் ஜனாதிபதி கோத்தாபய!

Share

அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும்  நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியில் இடம்பெற்றுள்ளது.

2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11 ம் திகதி நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்டகன் ஆகியவற்றை இலக்குவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஐ.நா. பொதுச்சபையின் 76வது கூட்டத் தொடரில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயோர்க் பயணம் மேற்கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கெளரவமளித்தனர்.

got

got 4

gott

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...