” களனி தேர்தலில் நான் அரசியல் செய்தேன். ஆனால், ஊழல் – மோசடிகளில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.” இவ்வாறு அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் எவரிடமும் பணம் வசூலிக்கவில்லை. கப்பம் பெறவில்லை. அரசியலில் ஈடுபட்டாலும் ஊழல்களில் ஈடுபட்டதில்லை. இது மக்களுக்கு தெரியும். நான் ஊழல் செய்துள்ளேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.
நான் வியாபாரி. பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். அதன்மூலமே எனக்கு பணம் கிடைத்தது.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ச சிறந்த தலைவர். துட்டகைமுனு மன்னருக்கு பிறகு தென்பகுதியில் உருவான மிகவும் சிறந்த தலைவர். வெளிநாடுகளிடம் அடிபணியவில்லை. போரை முடித்தார். ஆனால் இந்த அரசு தற்போது பயணிக்கும் பாதையால் அத்தகையதொரு தலைவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நான் மஹிந்தவுடன் இன்று இருந்திருந்தால் அவரையும் அழைத்துக்கொண்டி வெளியேறியிருப்பேன்.”- என்றார்.
Leave a comment