சீமெந்து தரையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நிரஞ்சலராசா சரணிகா (வயது-19) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கடந்த 29 ஆம் திகதியன்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீட்டின் சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்போது வீட்டின் வரவேற்பு பகுதியில் சறுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த அவரை உறவினர்கள் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment