image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

ஜகத் மனுவர்ணவுக்கு எதிராக கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அப்போது அவரது சட்டத்தரணி, “தனது கட்சிக்காரர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ காணி பகிர்ந்தளிப்பு நிகழ்வொன்றில் பங்கேற்றதால் சமூகமளிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இன்று (02) குறித்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நீதிமன்றத்திற்கு வருகை தராததை அடுத்து, நீதவான் இக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு திறந்த பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசியல் சூழலில், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகப் பழைய வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

 

 

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...