images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

Share

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இணைப்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில், நாமல ராஜபக்சவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் (SLPP) புதிய கூட்டணியை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏற்கனவே சமர்ப்பித்த இணைப்பு முன்மொழிவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்சியாக அணுகாமல், அவர்களைத் தனித்தனியாகத் தனது பக்கம் இழுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் அணுகுமுறை, கூட்டணியை உருவாக்குவதில் பெரும் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய நாட்களில், நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார். இது ரணில் விக்கிரமசிங்கவுடனான ஒரு பரந்த கூட்டணியை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டதால் ஏற்பட்ட தோல்விகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், “இப்போதும் ஒன்றுபடாவிட்டால் எதிர்கால தேர்தல் வெற்றிகள் கடினமாகிவிடும்” எனத் தமது தலைமைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையின் ‘அலட்சியப் போக்கு’ காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சி தவிர்க்க முடியாமல் நாமல் ராஜபக்ச தலைமையிலான தரப்புடன் கைகோர்க்கும் சூழல் உருவாகி வருவதாகத் தென்னிலங்கை அரசியல் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...