4 1
செய்திகள்இலங்கை

பிள்ளையார் சிலை மாயம்!! – பெரும் பரபரப்பு!!

Share

மடு பிரதேசத்தில் பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளது.

மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.

சிலை காணப்பட்ட அதே இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்துக்கு அண்மையில் காணப்பட்ட மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில், முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.

தற்போது குறித்த பிள்ளையார் சிலையை அங்கிருந்து அகற்றியுள்ள விஷமிகள், அவ்விடத்தில் அந்தோனியார் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

குறித்த விஷமிகளின் செயற்பாடு தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...