jaffna 720x375 2
செய்திகள்இலங்கை

யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!

Share

யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து 3 பேர் பல்கலைக்கழக நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் கொரோனா பி.சி.ஆர். ஆய்வுகூடத்தில் பணியாற்றிய 4 மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றதால்
பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக பல்கலைக்கழக நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆளணியை உள்வாங்க துணைவேந்தர் பணித்திருந்தார்.

இதற்கமைவாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே விரைவாக பி.சி.ஆர். பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...