SLPP
செய்திகள்இலங்கை

பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகின்றன!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவது தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகள் இக்கூட்டத்தின்போது எடுக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.

பங்காளிக்கட்சிகள் இவ்வாறு தொடர் சந்திப்புகளை நடத்துவதால் அரசாங்க கூட்டணியின் பிரதான பங்காளியான மொட்டு கட்சி கடும் அதிருப்தியில் இருக்கின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...