Sampanthan4 1
செய்திகள்இலங்கை

அரசமைப்பின் ஊடாக தீர்வை பெறுவதே எமது நோக்கம்! – சம்பந்தன்

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தினர் எனவும் செய்திகள் வெளியாகின.

இதனால் சில விடயங்களில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாால் இதனை தெளிவுபடுத்தும் வகையில் இரா.சம்பந்தன் இன்று மாலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

ஒற்றுமையைப் பேணுவது எமது அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். மாறாக அவர்களை குழப்பமடையச் செய்யக்கூடாது.

முழுமையான அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாக கூறப்படுகிறது.

தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் சமத்துவம் நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் தீர்வை எட்டு குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தெளிவின்மை மற்றும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்– என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankas president
இலங்கை

மீண்டும் சந்தித்த கோட்டா மற்றும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில்...

arested
இலங்கை

நகரசபை உறுப்பினர் கைது – காத்தான் குடியில் சம்பவம்.

  பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய...

hos
இலங்கை

பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களினையும் மூடுவது சிறந்தது – அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை.

மருத்துவ மற்றும் குடிமை உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஒரு...

anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...