WhatsApp Image 2022 02 12 at 11.32.13 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்து! – இளைஞன் பலி

Share

அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கேட் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் பலத்த காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் அராலி செட்டியர் மடம் சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உடையார்கட்டு – விசுவமடு பகுதியை சேர்ந்த, வட்டுக்கோட்டை மேற்கில் வசித்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Image 2022 02 12 at 11.32.12 AM WhatsApp Image 2022 02 12 at 11.32.13 AM 1 WhatsApp Image 2022 02 12 at 11.32.12 AM 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...