are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

Share

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் ஆவார்.

மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டியாவைச் சேர்ந்த ஒருவரிடம் 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைவாக, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், நேற்றைய தினம் காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...