knowmylife bg
செய்திகள்அரசியல்இலங்கை

பிரதமரின் கணக்கிலிருந்து பணம் கொள்ளை! – எதுவுமே தெரியாது என்கிறார் நாமல்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து. பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஏதும் இதுவரை பதிவாகவில்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம், பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடி செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தற்போது ஊடகங்களில் வெளியான இச் செய்தியானது தமக்குத் தெரிந்தவரை உண்மைக்குப் புறம்பானவை என்றும் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் வங்கிக் கணக்கு தொடர்பான சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும், அத்துடன் பிரதமருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்தும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 17
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நிதித்துறை மீதான வரி உயர்வு: ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது

இலங்கையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வரி வரம்பிற்குள் கொண்டு வரும் நோக்கில், வரும் ஜூலை...

world 15
செய்திகள்இந்தியா

தமிழக அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் மாற்றம்: தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து நடவடிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம்...

world 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சார சபை ஊழியர்களுக்கு நஷ்டஈடு: மே 15 முதல் முதற்கட்டப் பணம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டு, அதன் பணிகள் புதிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ...

world 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எயார்பஸ் ஊழல் வழக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவுக்குப் பிணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க...