son dad
செய்திகள்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

Share

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

வவுனியாவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா மதியாமடு, புளியங்கும் பகுதியைச் சேர்ந்த (வயது–73) செபமாலை இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நாட்டில் 2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இராசதுரை விஜி கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த 12 ஆண்டுகளாக தேடி மகன் பற்றிய நம்பகர தகவல் ஏதும் அறியாமலேயே இந்த தந்தை உயிர்நீத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்துகொண்டு தொடர்ச்சியாக போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...