chava hospital
செய்திகள்இலங்கை

சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று!

Share

சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்று 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களில் 45 பேரிடம் நடத்தப்பட்ட பி.சி.ஆர்சோதனையில் 41 முதியவர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...