closed
செய்திகள்இலங்கை

ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு பூட்டு!

Share

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான நேரத்தில் எரிவாயு , கோதுமை மா ஆகியவற்றுக்காக அலைந்து திரிய வேண்டியுள்ளதாகவும், இரவில் மின்வெட்டு காரணமாக ஹோட்டல், பேக்கரிகள் இயங்க முடியாதுள்ளதாகவும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரத் துண்டிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் பேக்கரி கடை நடத்த முடியாதுள்ளதாகவும் கடை வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றை வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்க்கமான முடிவை காணாவிட்டால் தமது வர்த்தகத்தை நிரந்தரமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...