10 1
இலங்கைசெய்திகள்

164 பேரை ஏமாற்றி பெண் செய்த பாரிய மோசடி அம்பலம்! சிக்கிய பல தொழிலதிபர்கள்

Share

தொழில் அதிபர்கள் உட்பட பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இலவசப் காணிப் பத்திரங்களை வழங்குவதாக சுமார் 100 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டில் 164 வணிக உரிமையாளர்களை நிதி மோசடி செய்ததற்காக இந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பக்கமுன, மகரகம பகுதிகளை சேர்ந்த சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

உருமய இலவசப் காணி பத்திரத் திட்டத்தின் கீழ் பத்திரங்களை வழங்குவதாக கூறி 164 பேரை ஏமாற்றியும் , பின்னர் ஒரு வழக்கறிஞராக நடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் 600,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண் கல்முனையைச் சேர்ந்த சுமார் 50 தொழிலதிபர்களை அரசியல் பற்றி விவாதிக்க சிறிகொத்தா தலைமையகம் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகளுக்கு வரவழைத்து, இலவசப் பத்திரங்களை வழங்குவதாக கூறி, அவர்களையும் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...