9 1
இலங்கைசெய்திகள்

உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி: சஜித் குற்றச்சாட்டு

Share

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பொலன்னறுவை – மின்னேரியவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சஜித் பிரேமதாச மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டஅவர், இந்த அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை.

அதே போன்று உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி காரணமாக விவசாயிகளுக்கு எதுவித பிரதிபலனும் கிடைப்பதில்லை.

அவற்றுக்கு வரி விதிக்கமுன்னரே உருளைக்கிழங்கும், பெரிய வெங்காயமும் பெரும் தொகையாக இறக்குமதி செய்யப்படடு களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டது.

விவசாயிகளின் பிரச்சினை மற்றும் யானை – மனித மோதல்களைத் தீர்ப்பதற்கான என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...