Tamil News large 2059293
இலங்கைசெய்திகள்

நாட்டில் உணவின்றி 8.7 மில்லியன் மக்கள்

Share

சுமார் 8.7 மில்லியன் இலங்கை மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது இது கடும் சரிவு என்றும் இலங்கை உணவில் புரதத்தின் முக்கிய ஆதாரமான மீன் நுகர்வு சராசரியாக வாரத்துக்கு 0.8 நாட்கள் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.4 சதவீத குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவை உட்கொண்டு வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

செப்டெம்பர் 5ஆம் திகதிமுதல் 9ஆம் திகதி வரை 22 ஆயிரம் பேருக்கு பண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் 120, 716 பேருக்கு இம்மாதத்துக்குள் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

உதவிகள் இன்றி எதிர்வரும் மாதங்கள் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்றும் விலை  உயர்வுகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தில் இரண்டு குடும்பங்கள் ஏற்கெனவே தங்களது வருமானத்தில் 75 சதவீதத்தை உணவுக்காகச் செலவிடுகின்றனர் என்றும் உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...