Hegelia Rambukkala
இலங்கைசெய்திகள்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? – 30ம் திகதி இறுதித் தீர்மானம்

Share

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒக்ரோபர் முதலாம் திகதி திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதன்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும்.

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்கெல இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கும் போது மக்கள் முறையான சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா பரவலை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமையை அவதானிக்கும் கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் பெருமளவு தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 10 நாடுகளுள் இடம்பிடித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...