இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், குறித்த மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.