16 4 scaled
இலங்கைசெய்திகள்

வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Share

வனிந்து ஹசரங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது ஒழுக்கமின்மை காரணமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் நடுவர் ஒருவரிடமிருந்து தொப்பியை அவர் பறித்துக்கொண்டதாகவும், அது ஒழுக்காற்று விதிகளை மீறுவதாகவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த குற்றத்திற்காக மூன்று அபராத புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டி கட்டணத்தில் ஐம்பது சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர் இழக்கவுள்ளார். இந்த போட்டிக்கு அவர் பெயரிடப்படவில்லை என்றால், வரவிருக்கும் உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...