america
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதுக்குழுவினர் இலங்கையில்

Share

உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழுவினர், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (14) இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணை பாதுகாப்பு செயலாளர் ஜெடிடியா ரோயல் குழுவில் அங்கம் வகிப்பதுடன், இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை தூதுக்குழுவினர் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவானது போயிங் சி 17 குளோபல் மாஸ்டர் 3 விசேட விமானத்தில் இலங்கையை வந்தடைந்தாகவும் இந்த பயணம் உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடல் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தூதுக்குழுவினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்போது,  கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிய பாதை அவர்களது வருகையின் போது போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...