6757
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளை முதல் மாகாணங்களிடையே ரயில், பஸ் சேவைகள் ஆரம்பம்

Share

நாளை முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை திட்டமிட்டுள்ளன.

அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

சுகாதார விதிமுறைகளின் படி சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றிருத்தல் வேண்டும், முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்றவற்றை கடைப்பிடித்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் 152 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்தார்.

பயணிகள் வசதிக்காகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரயில்வே திணைக்களம் அதிக ரயில்களை ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக தமது பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....