போராட்டம் 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நாளை தேசிய எதிர்ப்பு தினம்!

Share

இலங்கையில் நாளை (09) தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக போராட்டக்காரர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் இணைந்து, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அறவழி போராட்டத்தை நடத்தவுள்ளன.

காலி முகத்திடல் போராட்டக்களம் உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...