20220403 122442 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

Share

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில், ஜே வி பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்ததன் காரணமாக இன்றைய தினம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர் சந்திப்பு நடக்க இருந்த இடத்தைச் சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை அலுவலகத்திற்குள்ளே நிறுத்துமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை வீதியில் பயணிக்க முடியாது எனவும் ஊடகவியலாளர்கள் ஊரடங்கு வேளையில் வீதியில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்த பொலிஸார் கைத்தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளை கருதி வீதியில் பயணிப்போர் தமக்குரிய அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி வீதிகளில் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிசாரினால் ஊடகவியலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அனைவரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் .

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...