ஜி.எல்.பீரிஸ்
இலங்கைசெய்திகள்

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு விரைவில்

Share

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்குள் வெளியிடப்படும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்த குழுவானது அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என பல தரப்புகளுடனும் சந்திப்புகளை நடத்தி ஆலோசனைகளையும், யோசனைகளையும் பெற்றது.

இதன்படி ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம், நிபுணர்கள் குழுவால் கையளிக்கப்படும்.

அதன்பின்னர் பரந்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதிய அரசமைப்பு இயற்றப்படும். என்றார்.

அதேவேளை, புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவும் வழங்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....