20220319 114838
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்! – சுமந்திரன் வலியுறுத்து

Share

” பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை இந்த அரசு மீள கையில் எடுத்துள்ளது. எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்.

யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அழுத்தம் பிரயோகித்தார்.

” பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என அரசு உறுதியளித்துள்ள நிலையில், காலாவதியான அந்த சட்டம் மீள கையில் எடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகும். வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டங்களில் ஈடுபடும் உரிமை அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில் போராட்டக்காரர்கள்மீது எவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியும்? எனவே, கைதானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டும்.” – எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...