விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்துள்ளது.
மேலும், விமானத்தினை தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.