721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் தீவிரம்!

Share

சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி – பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.ஜே.வி.பி. உறுப்பினர்களைதவிர, எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் 37 உறுப்பினர்கள்வரை இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகித்தல், 19 ஐ மீள செயற்படுத்தல் உட்பட முக்கிய சில விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே சர்வக்கட்சி அரசு அமையவுள்ளது.

இதற்கு ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இன்றும் பேச்சுகள் தொடரவுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான 113 என்ற அறுதிப்பெரும்பான்மையை பெறலாம். எனவே, மொட்டு கட்சி உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....