300593818 5367868793261952 5469180823014857854 n
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டில் பிளவு! – பீரிஸ், டலஸ் உட்பட 13 எம்.பிக்கள் வெளியேற்றம்!!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சியின் முக்கியமான 13 எம்.பிக்களே இவ்வாறு, ஆளுந்தரப்பில் இருந்து வெளியேறி, எதிரணி பக்கம வந்து, சுயாதீனமாக இயங்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

தமது அணி ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தது, அதற்கான காரணங்கள் எவை என்பன உள்ளிட்ட விடயங்களை விபரித்தார். விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினார். அத்துடன், சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ள மொட்டு கட்சி எம்பிக்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார்.

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். இதனால் மொட்டு கட்சி இரண்டாக பிளவுபட்டது.

சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டு கட்சி எம்பிக்கள் விபரம்

1. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
2. டலஸ் அழகப்பெரும
3. பேராசிரியர் சன்ன ஜயசுமன
4. பேராசிரியர் சரித ஹேரத்
5. கலாநிதி நாலககொடஹேவா
6. கலாநிதி குணபால ரத்னசேகர
7. வைத்தியர் உபுல் கலப்பதி
8. வைத்தியர் திலக் ராஜபக்ச
9. சட்டத்தரணி டிலான் பெரேரா
10.சட்டத்தரணி உதயன கிரிந்திகொட
11.சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார
12.கே.பி.எஸ். குமாரசிறி
13. லலித் எல்லாவல

ஆர்.சனத்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...