ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் நேற்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கட்சியின் கொள்கைகளுக்குத் துரோகம் இழைத்துள்ளார் என்று அவர் மீது சுதந்திரக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், அவர் கட்சியின் ஊடகப் பேச்சாளர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்று சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment