nanthinixavier 7878
இலங்கைசெய்திகள்

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

Share

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமாகியுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் செயற்பட்டவர்.  இலக்கியத்துறை மற்றும் சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர்.

1967 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் தடம்பதித்து கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக் கட்டுரை என தனது பல ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் சிறுகதை இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

அத்துடன் இவரின் படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

மேலும் இவர் கலாபூசணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...