image 961255b90b
இலங்கைசெய்திகள்

வட்டமேசை மாநாடு – இலங்கையும் பங்கேற்கிறது

Share

சீனா, இந்தியா, சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளின் பங்குபற்றுதலுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கடன் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய ஜி20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி 20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படவுள்ளதுடன், ஜி20 நிதி அதிகாரிகள் எதிர்வரும் 23 முதல் 25 ஆம் திகதி வரை வட்டமேசையின் நேரடி கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

வட்டமேசையில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்களின் பாரிஸ் கிளப் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

பாரம்பரிய கடனாளிகள் முதல் பணக்கார பொருளாதாரங்களில் புதிய கடன் வழங்குபவர்கள் வரை, அத்துடன் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள் மற்றும் தனியார் துறையை ஒன்றிணைப்பதே வட்டமேசை மாநாட்டின் நோக்கம் என்று நாணய நிதியம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...