IMG 20230524 WA0038
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம்!

Share

பொலிஸ் தலைமையகத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம் சார்பாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகங்களும் நடத்தப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த, உதவி பொலிஸ் பரிசோதகர் ஐயந்த மற்றும் யேசுராஜ் உள்ளிட்ட குழுவினரும் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கமகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த விஐயவர்தன, காங்கேசன்துறை பிராந்திய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காரியவசம், தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயபால உள்ளிட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...