namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் முன்பு போல இல்லை! – கூறுகிறார் நாமல்

Share

‘பொடி மைனா’ என்று தன்னை அழைப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணையத்தைப் பயன்படுத்தி அவரே தாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இணையத்தில் மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் தன்னை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிப்பதாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, தன்னை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக மக்கள் ஏற்றுக்கொண்டமையால் தான் மகிழ்ச்சி அடைவதாக சுட்டிக்காட்டினார்.

2005ஆம் ஆண்டு 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இணையம் இருந்ததாகவும் மஹிந்த அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்கின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் குழப்பமடைந்தாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை என குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகுக்கு விசுவாசமாக இல்லை என்றும் அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலை துடைத்தெறிந்தாகவும் அவர் மனித உரிமைகள் பற்றி இப்போது பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...