namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் முன்பு போல இல்லை! – கூறுகிறார் நாமல்

Share

‘பொடி மைனா’ என்று தன்னை அழைப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணையத்தைப் பயன்படுத்தி அவரே தாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இணையத்தில் மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் தன்னை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிப்பதாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, தன்னை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக மக்கள் ஏற்றுக்கொண்டமையால் தான் மகிழ்ச்சி அடைவதாக சுட்டிக்காட்டினார்.

2005ஆம் ஆண்டு 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இணையம் இருந்ததாகவும் மஹிந்த அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்கின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் குழப்பமடைந்தாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை என குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகுக்கு விசுவாசமாக இல்லை என்றும் அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலை துடைத்தெறிந்தாகவும் அவர் மனித உரிமைகள் பற்றி இப்போது பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...