sri lanka parliament 0 1200x550rrrr scaled
இலங்கைசெய்திகள்

அபராதத் தொகை அதிகரிப்பு! – வெளியாகியது வர்த்தமானி

Share

நுகர்வோர் விவகார அதிகார சபையால் சில பொருள்களுக்கான நிர்ணய விலை குறிப்பிட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய தனிநபர் வியாபாரங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 1000 ரூபா அபராதம் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபா அபராதம் ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் இரண்டாவது தடவை அதிகூடிய விலைக்கு பொருள்கள் விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டப்பணத்துக்காக 20 ஆயிரம் ரூபாவும் 2 லட்சம் ரூபாவுக்கு 10 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நிறுவனம் ஒன்றில் இந்தத் தவறு இழைக்கப்படுமாயின் 100 ரூபா தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபாவாகவும் ஐந்து லட்சமாக நிலவிய அபராதம் 50 லட்சமாகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டம் திருத்தமின்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...