தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான தளம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியிருந்தார்.
குறித்த கருத்திற்கு, கருத்துக்கு டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பதிலளித்துள்ளார்.
அதில், சந்திரசேகரின் இந்த விமர்சனம் “பயத்தின் உச்சகட்டம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தளம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவோ அல்லது ஆட்சியை மாற்றுவதற்காகவோ உருவாக்கப்படவில்லை என்றும், தமிழ் பேசும் மக்களின் பொதுவான இனப் பிரச்சினைகள் மற்றும் நில அபகரிப்பு போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.