dalasRER
இலங்கைசெய்திகள்

ரஞ்சனுக்கு கிடைத்த தண்டனைகள் அதிகம் – டலஸ் அழகப்பெரும

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட இரண்டு தண்டனைகள் மிகவும் கடுமையானவை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு மேலதிகமாக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இது ஒரு குடிமகனுக்கு வழங்கக்கூடிய கடுமையான தண்டனை என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை மற்றும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து போன்ற இரண்டு தண்டனைகள் கிடைப்பது மிகவும் கடுமையானது.

இதற்கு மேலும் அவரை தண்டிக்க ஜனாதிபதி கருதக்கூடாது. மேலும் அவரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்காது நல்ல விதமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...