23 6574794296435
இலங்கைசெய்திகள்

மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!

Share

மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக நகர்ப்புற பகுதிகளுக்கான நீர்விநியோகமும் தடைப்படலாம் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் மின்சாரத் தடையால் வைத்தியசாலைகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டால், பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான மின் வளங்கள் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று மாலை 5 மணி அளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் வழங்கியுள்ளது.

இதன் காரணமாக மின்விநியோக தடை நீடிக்குமேயானால் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் நீர்விநியோகமும் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...