23 6574794296435
இலங்கைசெய்திகள்

மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!

Share

மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக நகர்ப்புற பகுதிகளுக்கான நீர்விநியோகமும் தடைப்படலாம் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் மின்சாரத் தடையால் வைத்தியசாலைகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டால், பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான மின் வளங்கள் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று மாலை 5 மணி அளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் வழங்கியுள்ளது.

இதன் காரணமாக மின்விநியோக தடை நீடிக்குமேயானால் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் நீர்விநியோகமும் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...