Marikkar
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் அரசியல் நாடகம்! – மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்கிறார் மரிக்கார் எம்.பி

Share

அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் என அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. ஆனால் அமைச்சுகளுக்கான வரப்பிரதாசங்களை அவர்கள் இன்னமும் அனுபவிக்கின்றனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர் எனக் கூறப்படுகின்றது. ஆனால் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம் வரவில்லை. வாகனங்கள், வீடுகள் மீளப்பெறப்படவில்லை.

அமைச்சுகளுக்கான அரசியல் நியமனங்களும் தொடர்கின்றன. எனவே, பதவி துறப்பு என்பது வெறும் நாடகம். எனவே, இந்த அரசு வீடு செல்லும்வரை மக்கள் போராட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

” பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளிவந்துவிட்டது. இதுகூட தெரியாமல் எதிரணி உறுப்பினர்கள் உளறுகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...