கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, குழந்தையை மீட்ட பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று காலை முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில்தெரியவந்துள்ளது.
அத்துடன், தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில் உள்ளமையினால், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற காவல்துறையினர் விசாரணைகளினை முன்னெடுத்துள்ளனர்.