WhatsApp Image 2022 04 26 at 1.21.07 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் இல்லம் முன்பு முளைத்தது ‘மைனாகோகம”

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி காலி முகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம” என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி பிரதமர் இல்லம் முன்பாகவும் கடந்த சில நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே அங்கு, ‘மைனாகோகம” எனும் பெயரில் புதிய கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் நிராகரித்திருந்தது.

ஏற்கனவே காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் கிராமம் அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 26 at 1.21.01 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pers
இலங்கை

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் – மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல் வரை...

school closd
இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை – பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளைய தினம், கண்டி மாவட்டத்தின்...

hgfn
இலங்கை

வெள்ள அபாயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த...

vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...