1 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரச சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கொழும்பில் எதிரணி பெரும் போராட்டம்!

Share

மக்கள் விரோத அரசின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எனினும், அங்கிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி ஆரம்பமான பேரணியைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

சுதந்திர சதுக்கத்துக்குச் செல்லும் சகல நுழைவு வீதிகளையும் வீதித்தடைகள் மற்றும் காவலரண்கள் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாருடன் பெருமளவு விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். எதிரணியினரின் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னோக்கிச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்புத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் இவ்வாறு எதிரணியினர் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுப்பது முறையற்றது எனவும், அதனால் அதைத் தடுத்து நிறுத்தினோம் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...