இலங்கைசெய்திகள்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

Share

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுதல் தொடர்பான தீர்மானம் ஒரு வார காலத்துள் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் மற்றும் கொரோனா தொற்று காரணமாக நடத்தி முடிக்காமல் போன அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தாமதம் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமடைகின்றன.

இந்த நிலையில் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் சாத்தியங்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்கின்றது.

எனவே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அழகியல் பாட செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதால் பிரச்சினைகள் தோன்றும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...