ali subri
இலங்கைசெய்திகள்

இனங்காணப்படுவோரில் 98 சதவீதமானோருக்கு டெல்டா!

Share

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.

அத்துடன் டெல்டா வைரஸ் பரவலால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என நீதி அமைச்சர் எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம், தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் என்பனவற்றால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் அரசின் வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசு ஒரு இக்கட்டான சூழலில் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சாதாரண விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய அரிசியை அதிக விலைக்கு விற்கின்றனர். அல்லது பதுக்கி வைக்கின்றனர். எனவே அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்படுதல் அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...