jayantha keddakoda
இலங்கைசெய்திகள்

கப்ரால் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொட!

Share

மத்திய வங்கியின்  ஆளுநராக தற்போதுள்ள பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்னும் சில தினங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவாட் கப்ரால் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளார்.

இதையடுத்து வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை மீண்டும் நியமிப்பது தொடர்பில் பெரமுன கட்சி அவதானம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து தனது நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை துறந்த ஜெயந்த கெட்டகொடவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...