jayantha keddakoda
இலங்கைசெய்திகள்

கப்ரால் வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டகொட!

Share

மத்திய வங்கியின்  ஆளுநராக தற்போதுள்ள பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்னும் சில தினங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவாட் கப்ரால் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளார்.

இதையடுத்து வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை மீண்டும் நியமிப்பது தொடர்பில் பெரமுன கட்சி அவதானம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து தனது நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை துறந்த ஜெயந்த கெட்டகொடவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...