காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள சம்பவம் ஒன்று நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில், இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.