Tissa Attanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் எந்த மாற்றமும் இல்லை!

Share

இலங்கையின் அரசியல் புலத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட வில்லை, தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார்.

கண்டியில் நடந்த வைபவம் ஒன்றை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந் 9ம் திகதி நடந்த சம்பவங்களை அடுத்து அரசியலில் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து புதிய போத்தலில் பழைய மதுவை ஊற்றி கதைதான் நடந்து வருகிறது.

நிதி அமைச்சை பிரதமர் பொறுப் பேற்ற போதும் ஏனைய அமைச்சர்கள் ஏற்கனவே இருந்த அமைச்சர்கள்தான் தொடர்ந்தும் உள்ளனர். அதே அமைச்சர்களும் அதிகாரிகளும் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஒரு ட்ரிலியன் பணம் புதிதாக அச்சிட உள்ளதாக நிதி அமைச்சர் முதலாவதாக அறிவித்துள்ளார். இது நல்ல சகுனம் அல்ல. மேலும் மேலும் பணவீக்கம் ஏற்பட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு நிலையேயாகும். புதிதாக பணம் அச்சிட்டு அரசாங்கத்தை நடத்துவது என்பது எவராலும் செய்ய முடிந்த காரியமாகும். அதற்கு ஆட்சியையோ பாராளுமன்றமோ அமைச்சுக்களோ தேவையில்லை.

இன்னும் பழைய ஆட்சியாளர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளே நடக்கின்றன.

நாடும் நாமும் எதிர்பார்த்தது அரசியல் அமைப்பில் 19 பிளஸ் திருத்தத்தையாகும். அதாவது 19 வது திருதத்தை விடவும் சக்தி மிக்க ஒன்றை எதிர்பாத்த்தோம் . ஆனால் உத்தேச 20 வது திருத்தம் அப்படி எதையும் திருப்திப்படுத்துவதாக இல்லை.

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதை எதிர்பார்த்தனர். அது நடப்பதாக இல்லை. 21ம் திருத்தத்தில் நல்ல அம்சங்கள் இருப்பின் நாம் அதை ஆதரிப்பதில் பிரச்சினை இல்லை.

ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார முதலானோர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தக்க நியாயம் தெரிவிக்காத பட்சத்தில் அவர்கள் கட்சியால் ஒழுக்காற்று விசாரணைக்கு உற்படுத்தப்படுவர் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....