ggg 1
இலங்கைசெய்திகள்

அரிசிக்கு புதிய விலைகள்!

Share

அரசாங்கத்தால் அரிசிக்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் 3 வகை அரிசிகளுக்குமான புதிய விலையை அறிவித்துள்ளது.

இதனை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோ 140 ரூபாவாகவும் கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 165 ரூபாவாவும் விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடமிருந்து நாட்டரிசி கிலோ 62.50 ரூபாவுக்கும் சம்பா கிலோ 70 ரூபாவுக்கும் கீரி சம்பா கிலோ 80 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடிவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை நீக்கி அரிசி தட்டுப்பாட்டை நீக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...