gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

இவ் வாரத்துக்குள் புதிய அரசு! – ஜனாதிபதி தெரிவிப்பு

Share

” இவ் வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். ” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ராஜபக்சக்கள் இல்லாத, இளம் உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.

அதேபோல பிரதமர் பதவி விலகியதும், அமைச்சரவையும் கலைந்தது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க இதன்மூலம் இடமளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.

இவ் வாரத்துக்குள் புதிய அரசு ஸ்தாபிக்கப்படும். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுள்ள, மக்களின் நம்பிக்கையை வெள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக்குவேன். அமைச்சரவையும் நியமிக்கப்படும்.

நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு இடம்பெறும்.

ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். புதிய அரசு, நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அந்த கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்க தயார்.” – என்றார்.

#SriLankNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...